search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடோன் தீ"

    • பெயிண்ட் குடோனில் தீப்பிடித்து பயங்கரமாக எரிவதை கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
    • தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் அதிகமாக கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள காமனேரி பகுதியை சேர்ந்தவர் அருண். இவர் கடந்த 4 ஆண்டுகளாக ஓமலூர் பைபாஸ் அண்ணமார் தனியார் விடுதியின் எதிரே உள்ள ஒரு குடோனில் பெயிண்ட், தின்னர் வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

    வழக்கம் போல் நேற்று குடோனை மூடிவிட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் இன்று காலை 9 மணி அளவில் பெயிண்ட் குடோனில் தீப்பிடித்து பயங்கரமாக எரிவதை கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக ஓமலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவல் அறிந்த ஓமலூர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து குடோனில் தக தகவென எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க வேண்டி குழாய் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். ஆனால் தீ அதிகமாக கொழுந்து விட்டு எரிந்ததால் அவர்களால் அணைக்க முடியவில்லை. பின்னர் சேலத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள், காடையாம்பட்டி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, வரவழைக்கப்பட்டனர்.

    தீயணைப்பு வீரர்கள் வாகனங்களில் கொண்டு வந்த தண்ணீரை பயன்படுத்தி தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தின்னர் என்பதால் தீ அணையாமல் எரிந்து கொண்டு உள்ளது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சேலம் மாவட்ட தீயணைப்பு அலுவலர் வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடோனில் இருந்த பெயிண்ட், தின்னரின் மதிப்பு ரூ.10 லட்சம் என கூறப்படுகிறது. முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் இந்த பெயிண்ட் குடோனில் தீ வைத்து இருக்கலாம் என சந்தேகம் அடைந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கோமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ய உள்ளனர்.

    இந்த தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் அதிகமாக கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    ×